Header Ads Widget

சங்கராபுரத்தில் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 5000க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

சங்கராபுரத்தில் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் 5000க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள CAA குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி பல்வேறு அமைப்பினர் கடந்த வாரம் ஏற்படுத்தப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி டிசம்பர் 30ல் நடத்துவதாக அறிவித்திருந்த நிலையில் பொது மக்களுக்கும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது,


இந்நிலையில் பெண்கள் உட்பட ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோருடன் சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இருந்து ஊர்வலமாக மத்திய அரசுக்கு கன்டனம் தெரிவித்தும், குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறவும் முழக்கமிட்டு பேருந்து நிலையம் வரை சென்றனர், பின்னர் பல்வேறு அமைப்பை சார்ந்த தலைமை நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன், திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், முன்னால் சட்டமன்ற உறுப்பினர் அங்கையர்கன்னி மற்றும் குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு கூட்டமைப்பின் நிர்வாகிகள் பலரும் கன்டன உரையாற்றினர்.


Post a Comment

0 Comments