Header Ads Widget

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை தர்ம அடி கொடுத்து போலீசில் பொது மக்கள் ஒப்படைப்பு

 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை தர்ம அடி கொடுத்து போலீசில் பொது மக்கள் ஒப்படைப்பு..!



கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் வசித்து வருபவர் சுவாமிநாதன். இவரது மகன் ஹரிஹரசுதன்(28) இவன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இன்று அவனது வீட்டின் அருகே வசித்து வந்த 6 வயது சிறுமியை யாரும் இல்லாத நேரத்தில் விளையாட போகலாம் என கூறி வீட்டிற்குள் கூட்டிச்சென்று கதவை உள்பக்கமாக மூடி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளான் இதனால் பயந்து போன சிறுமி கூச்சலிட்டதால் ஹரிஹரசுதன் சிறுமியை தலையில் பயங்கரமாக தாக்கியுள்ளான். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட அப்பகுதி மக்கள் சிறுமியை மீட்டு அன்னூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதே வேளையில் அவனுக்கும் தர்ம அடி கொடுத்துள்ளனர்.

சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று சிறுமியை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமிக்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்


மிஷான்

செய்தி ஆசிரியர்

Post a Comment

0 Comments