Header Ads Widget

சங்கராபுரத்தில் காவல்துறையே தெய்வமெனவும் காவல் நிலையமே கோவில் எனவும் கூறி காவல் உதவி ஆய்வாளருக்கு புத்தாண்டு வாழ்த்து கூறிய மாற்றுத்திறனாளி

சங்கராபுரத்தில் காவல்துறையே தெய்வமெனவும் காவல் நிலையமே கோவில் எனவும் கூறி காவல் உதவி ஆய்வாளருக்கு புத்தாண்டு வாழ்த்து கூறிய மாற்றுத்திறனாளிகள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ராமராஜபுரம் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜாபர் சங்கராபுரம் காவல் நிலையம் வந்து காவல் உதவி ஆய்வாளர் சிவச்சந்திரனிடம் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் அப்போது ஜாபர் எனக்கு வெளியுலகை காண வாய்ப்பு தந்த காவல்துறையே தெய்வமெனவும், காவல் நிலையமே கோவில் எனவும் கூறினார்


கடந்த 2019 மார்ச் மாதம் வாட்சப்பில் தான் சில ஆண்டுகளாய் மரத்தில் இருந்து விழுந்து இடுப்பெலும்பு முறிந்த நிலையில் படுத்தப்படுக்கையாக இருப்பதாகவும் தான் வெளியுலகை காண ஆசைப்படுவதாகவும் மாற்றுத்திறனாளிக்கான இரு சக்கர வாகனம் வாங்கிட உதவிட கோரிக்கை வைத்து வாட்சப்பில் பதிவிட்டிருந்தார் அவை பலரால் பகிரப்பட்டு சங்கராபுரம் காவல்துறை உதவி ஆய்வாளர் சிவச்சந்திரன் கண்ணில் படவே ஜாபருக்கு உதவி செய்திட வேண்டுமென தீர்மானித்திருந்த நிலையில் அந்த வீடியோ திருக்கோவிலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகேசுக்கும், விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கும் எட்டியது உடனடியாக காவல் கண்காணிப்பாளர் உத்திரவின்படி துணை கண்காணிப்பாளர் மகேஸ் ஜாபர் வெளியிட்டிருந்த வீடியோ சம்மந்தமாக உண்மை தன்மை என்ன என்பதை காவல் உதவி ஆய்வாளர் சிவச்சந்திரனை விசாரிக்க கூறியுள்ளார், உண்மையை அறிந்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், காவல் துணை கண்காணிப்பாளர் மகேஸ் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் சிவச்சந்திரன் ஆகியோர் சில காவல்துறையினர் உதவியுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான இரு சக்கர வாகனம் புதிதாக வாங்கி அதை சங்கராபுரம் அருகில் உள்ள ராமராஜபுரம் கிராமத்தில் ஜாபரின் வீட்டிற்கே சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர் காவல்துறையுடன் சென்று வழங்கினார்கள்


படுத்தப்படுக்கையாக இருந்த ஜாபர் பெரும் மகிழ்ச்சியோடு அவற்றை பெற்று மறுபிறவி  எடுத்தவராய் இரு சக்கர வாகனத்தில் அந்த கிராமத்தையே வலம் வந்தது அப்பகுதியில் கான்போரை மெய்சிலிர்க்க வைத்த சம்பவமாகவே அவை காணப்பட்டது,


இந்நிலையில் 2020 புத்தாண்டு தினத்தில் ஜாபர் காவல்துறையால் தனக்கு வழங்கப்பட்ட இரு சக்கர வாகனத்தில் சங்கராபுரம் காவல்  நிலையம் வந்து காவல் உதவி ஆய்வாளர் சிவச்சந்திரனுக்கு இனிப்பு வழங்கி உற்சாகத்துடன் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார் அப்போது ஜாபர் தான் வெளியுலகத்தை பார்க்க காரணமாக இருந்த காவல்துறை தான் தனக்கு தெய்வமெனவும் காவல் நிலையமே கோவில் எனவும் கூறி காவல்துறையினறையும் பார்ப்போரையும் நெகிழவே செய்தார்


Post a Comment

0 Comments