Header Ads Widget

சின்னசேலம் அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்த நபரை ஓராண்டு குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது

சின்னசேலம் அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்த நபரை ஓராண்டு குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை



கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வகுமார் அவர்கள் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தகரை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் கடந்த 05.03.2022 தேதி அதே ஊரில் வசித்து வரும் பாப்பு வயது 60 என்பவரை நகைக்காக இரும்பு ராடால் அடித்து கொலை செய்த வழக்கில் சின்னசேலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும், இவர் வெளியே இருந்தால் வரும் காவலங்களில் தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும், இவர் நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வகுமார் அவர்கள் பரிந்துரையின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அவர்கள் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி சின்னசேலம் காவல் ஆய்வாளர் மேற்படி குற்றவாளியை கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


ஆ.மிஷான்

செய்தி ஆசிரியர்

Post a Comment

0 Comments