Header Ads Widget

சங்கராபுரத்தில் அரசு கலைக்கல்லூரி அமைத்திட எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

சங்கராபுரத்தில் அரசு கலைக்கல்லூரி அமைத்திட எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் முகமத் ரபி கோரிக்கை..!

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை மிக சிறப்பாக தமிழக முதல்வர் தலைமையில் செயல்பட்டு வருவது பாராட்டிற்குரியது,

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ரூபாய் மூன்று கோடி அளவில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு உண்மையிலேயே வரவேற்பிற்குரியது.



அதேபோல் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி மற்றும் சங்கராபுரம் பகுதியை சுற்றி அதிகளவு கிராமங்களும், கல்வராயன் மலைப்பகுதிகளும் உள்ளது. இங்குள்ள மாணவர்களின் உயர்கல்விக்கு வாய்ப்பாக சங்கராபுரத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான  ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறுவார்கள். மிகவும் பின்தங்கிய சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் கல்வி மேம்படும் வகையில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சங்கராபுரத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்க 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மிஷான், செய்தி ஆசிரியர் 

Post a Comment

0 Comments